Friday, May 14, 2010

Usurey Poguthey - Raavanan Lyrics

படம்: ராவணன். [Raavanan, Tamil]
பாடல்: உசுரே போகுதே, உசுரே போகுதே! [Usurey poguthey, Usurey poguthey]
இசை: ஏ.ஆர். ரகுமான். [A.R.Rahman]
பாடல்: வைரமுத்து. [Vairamuthu]

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்.....

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்...
ஒரு தீக்குச்சி விழுந்து புடிகுதடி...
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி...

உசுரே போகுதே, உசுரே போகுதே!
உதட்ட நீ கொஞ்சம் சுழிகயில...
ஓ! மாமன் தவிக்குறேன்...
மடிப்பிச்ச கேக்குறேன் மனசத்தாடி என் மணிக்குயிலே...
அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிகடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஓட்ட நினைக்கேன் ஆகல...
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல ..
தவியா தவிச்சு உசிர் தடம் கெட்டுத் திரியுதடி.
தைலாங்குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி...
இந்த மம்முதக் கிறுக்கு தீருமா. அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிருமா...
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே.
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே...


உசுரே போகுதே, உசுரே போகுதே!
உதட்ட நீ கொஞ்சம் சுழிகயில...
ஓ! மாமன் தவிக்குறேன்...
மடிப்பிச்ச கேக்குறேன் மனசத்தாடி என் மணிக்குயிலே...
அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி...
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிகடி நாக்கு துடிக்குதடி...

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல.
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுகத்தில.
விதி சொல்லி வழி போட்டன் மனுசப்புள்ள விதிவிலகில்லாத விதியுமில்ல....

எட்டயிருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை.
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல...
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே...

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா!
நான் மண்ணுக்குள்ள... உன் நெனப்பு மனசுக்குள்ள...
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே....


உசுரே போகுதே, உசுரே போகுதே!
உதட்ட நீ கொஞ்சம் சுழிகயில...
ஓ! மாமன் தவிக்குறேன்...
மடிப்பிச்ச கேக்குறேன் மனசத்தாடி என் மணிக்குயிலே...
அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிகடி நாக்கு துடிக்குதடி

Copy-Paste பண்ணும் நண்பர்களே, என் linkயும் சேர்த்து கொடுத்து உதவுங்கள்! என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!! நன்றி!!

4 comments:

உங்கள் எண்ணங்களை அள்ளி தெளியுங்கள்